இணையத்தில் ஜெயமோகன் வரும்போதெல்லாம், நான் அவரிடம் சில கேள்விகள் கேட்டு அவரை இம்சிப்பதுண்டு. மனிதர் அசந்து போகமாட்டார். ஐயமுற்ற ஒரு மாணவனுக்கு, ஒரு சிறந்த ஆசிரியர் எப்படி தெளிவாக பதில் தருவாரோ, அப்படியே எனக்கும் பதில் தருவார்.
5 ஆண்டுகளுக்கு முன் என் வாசிப்பில் ஒரு திருப்பம் நேரிட்டது. என் நண்பர் செந்தில்குமார் மூலமாக இலக்கியப்பித்து பிடித்து, எங்களூர் நூலகமே கதியாய் கிடந்தேன்.
”முதலில் ஜெயகாந்தனைப்படி” என்று சொன்னார்.
வெற்றிகரமாக, ஜெயகாந்தனைப் படித்துவிட்டு, “ஜெயகாந்தன் ஒரு அற்புத எழுத்தாளர்” என்று செந்திலிடம் சொன்னேன்.லேசானப் புன்னகையுடன் செந்தில் சொன்னார்.
“ஜெயகாந்தன் எழுத்து இலக்கியமாகாது என்று நிறைய பேர் சொல்லிக் கேள்விப்பட்டிருக்கிறேன். அவர் அப்படி ஒன்று பிரமாதமான எழுத்தாளர் இல்லை”.
“ஏன் அவர் எழுதியது இலக்கியமாகாது ?”
”அவர் எழுதுவது பெரும்பாலும் செண்டிமெண்ட் வகை எழுத்துக்கள். இவ்வாறு, வெறும் மனக்கிளர்ச்சியூட்டும் எழுத்து இலக்கியமாகாது.”
சோர்ந்து போனேன். கிட்டத்தட்ட நான் ஒரு மாதகாலமாகப் படித்தது இலக்கியமில்லையா? தோற்றுப் போனவனாய், செந்திலைப் பார்த்தேன். என் மனநிலையைப் புரிந்து கொண்ட செந்தில் சொன்னார்.
“ஜெயகாந்தனின் இலக்கியம், படிக்க சுவாரஸ்யமாக இருக்கும். அதனால்தான் அவற்றைப்படிக்கச் சொன்னேன். அவரின், “ ஒரு இலக்கியவாதியின் அரசியல் அனுபவங்கள்” மற்றும் “ஒரு இலக்கியவாதியின் சினிமா அனுபவங்கள்” என்னும் இரு புத்தகங்களும் நன்றாக இருக்கும்”.
“அவற்றையும் படித்துவிட்டேன்” என்றேன்.
“அடுத்து சு.ரா.வைப் படி” என்றார் செந்தில்.
“அது யாரு சு.ரா.?”
“சுந்தர ராமசாமி. அவரின் “ஒரு புளிய மரத்தின் கதையைப் படித்துப்பார்”.
பெயரைக்கேட்டவுடன், எனக்குள் புன்னகைத்தேன். புளியமரம் தன் வரலாறைச் சொல்லும் கதையாக்கும் என்று நினைத்துக்கொண்டேன். ”என் பெயர் புளியமரம். என்னை நீங்கள் சாலையில் ஓரத்தில் காணலாம். நான் நிழல் தருவது மட்டுமில்லாமல், புளியங்காய்களையும் தருவேன்.” என்னும் ரீதியில் என் மனம் பறந்தது.
நூலகத்துக்கே என்னுடன் வந்து, அந்தக் கதையைக் கண்டுபிடித்துக் கொடுத்தார் செந்தில். அடுத்த நாள், செந்திலைப் பார்த்த நான், புலம்பினேன்.
“என்ன செந்தில் இது? கதை ஒண்ணுமே புரியல. தமிழ் வரிகள் படிக்கப் படிக்க குழப்பமா இருக்குது”.
“இல்ல பெத்து, இது ரொம்ப அற்புதமான நடையுள்ளக் கதை. சு.ரா. வின் சொந்த ஊர் நாகர்கோயில். அங்கே இருக்கும் மக்களின் பேச்சுத்தமிழ், மலையாள வாடையுடன் இருக்கும். மெதுவாகப் படி. புரியும்.”
மெல்ல படிக்க ஆரம்பித்தேன். தாமோதர ஆசான், என்னைக் கதைக்குள் இழுத்துக் கொண்டார்.
கதையில் நாயகர்களே இல்லை. தாமோதர ஆசான் ஒரு கதை சொல்லி மட்டுமே. இப்படி ஒரு கதையை, மற்ற எழுத்தாளர்களால் எழுத முடியுமா என்பது சந்தேகம் தான்”.
புளிய மரம், என்னைக் கனவிலும் வந்து சந்தோசப்படுத்தியது. செந்திலுக்கு நன்றி சொன்னேன்.
சு.ரா.வின் ”ஜே.ஜே. : சில குறிப்புகள்” படி என்றார்.
அன்றே “ஜே.ஜே” என் கையில் இருந்தது.
(தொடரும்)
உண்மை கசக்கும்
இருப்பில் வைத்துக் கொள்ள இயலவில்லை. கழிந்து கொண்டே இருக்கிறது காலம்.
Monday, April 28, 2008
Friday, March 9, 2007
Subscribe to:
Posts (Atom)